சனி, 6 ஜூன், 2015

ஆரைக் கீரை

ஆரைக் கீரைக்கு  "நீர் ஆவாரை" என்ற மற்றொரு பெயரும் உண்டு. இக்கீரை நீரோடைகள், வாய்க்கால்,எரி குட்டைகள் போன்ற இடங்களில் தன்னிச்சையாக வளரக்கூடியது.தண்ணீர் இல்லையென்றால் இக்கீரை அழிந்து விடும்.இக்கீரை வயல்களில் பயிர்களுக்கு இடையில் களையாக வளர்ந்து இருக்கும்.இக்கீரை இரண்டு முதல் மூன்று அங்குலம் வரை வளரக்கூடியது. இதன் தண்டு மெலிதாக இருக்கும். இக்கீரையில் அதிக எண்ணெய் பசை இருப்பதால் இதன் மேல் தண்ணீர் ஒட்டாது. ஒரு காம்பில் நான்கு இலைகளுடன் காட்சி அளிக்கும்.இதன் இலைகள் பச்சை நிறத்தில் மெலிதாக இருக்கும். இக்கீரை பூக்காது.

மருத்துவ பயன்கள்:
  இகீரையில் கால்சியம்,பொட்டடாசியம்,இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி , சி ஆகியவை உள்ளன. இக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை தரும், வெப்பத்தை போக்கும். இக்கீரை உள்ளத்திற்கு அமைதி அளிக்கும், உடலுக்கு வலிமையும், சக்தியும் அளிக்கும்.கீரை இனத்திலேயே அதிக ருசியும் அதிக சத்துகளும் கொண்ட கீரை இது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இக்கீரையை உண்டு வந்தாள் நோய் குறையும்.

நீராரைக் கீரை நோய் தீர்க்கும் கீரை...!