வியாழன், 16 ஜூலை, 2015

ஆதொண்டை கீரை

     
 ஆதொண்டை கீரை, கொடி வகையை சேர்ந்தது. தடிப்பான இலைகளை கொண்டது. துளிர்விடும் பொழுது மஞ்சள் நிறமாகவும் முற்றிய இலைகள் பச்சை நிறத்திலும் இருக்கும். இக்கீரைக் கொடி வேலிகளில் படர்ந்து வளரும் தன்மையுடயது. இதன் காய்கள் இதன் இலை வடிவிலேயே இருக்கும். இக்கீரையை வீட்டிலும் வளர்க்கலாம்.

மருத்துவப் பயன்கள்:
  இகீரையில் கால்சியம்,பாஸ்பரஸ், வைட்டமின் பி,சி ஆகியவை உள்ளன. 
ஆதொண்டை கீரை வாத நோய் மற்றும் ஒற்றை தலைவலியுடன் கூடிய மூக்கடைப்பு ஆகிய நோய்களை விரைவில் குணப்படுத்தும். சிரணக் கோளாறுகளை சீர் செய்யும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு. "ஆதொண்டை கீரை தலைவலி ஆற்றுமே" என்பது சித்தர் வாக்கு.

ஆதொண்டை கீரை நன்மை மிக்க கீரை....!