திங்கள், 12 அக்டோபர், 2015

அம்மான் பச்சரிசிக் கீரை

அம்மான் பச்சரிசிக் கீரை தோட்டங்களிலும் வாய்கால் ஓரங்களிலும் கொடி போல் படர்ந்து இருக்கும். பக்கத்திற்கு ஒன்றாக இலைகளையும், இலைகளுக்கு நடுவே சிறு காய்களையும் உடையது. இச்செடியை உடைத்தல் வெண்மையான பால் வரும்.

மருத்துவப் பயன்கள்:
  இக்கீரை நிறைய சத்துக்களை கொண்டது.அம்மான் பச்சரிசிக்  சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. இக்கீரை வாய்புண், வாய் மற்றும் உதடு வெடிப்பு, மலத்துவாரத்திலுள்ள வெடிப்புகள் போன்றவற்றை குணமாக்கும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வேண்டிய அளவு பால் சுரப்பை தரும். இம்மூலிகை 'எம்பெருமான் பச்சரிசி' என்று சித்தர்களால் சிறப்புடன் அழைகப்படுகிறது.

அம்மான் பச்சரிசிக் கீரை ஓர் அரிய கீரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகளை பதிவு செய்க: