செவ்வாய், 6 அக்டோபர், 2015

கரிசலாங்கண்ணிக் கீரை

 கரிசலாங்கண்ணிக் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அறிய கீரை. கரிசலாங்கண்ணிக் கீரையின் வேறு பெயர்கள் பொற்கொடி, மஞ்சள்பாவை, பொற்றலைக்கரப்பான் ஆகும். கரிசலாங்கண்ணிக் கீரையின் இலைகள் நீண்டு கூர்மையாக இருக்கும். கரிசலாங்கண்ணிக் கீரையில் நன்கு வகைகள் உண்டு அவை மஞ்சள், நீளம், சிவப்பு, வெள்ளை ஆகும். இதில் வெள்ளை கரிசலாங்கண்ணி வெள்ளை பூக்களையும் மஞ்சள் கரிசலாங்கண்ணி மஞ்சள் பூக்களையும் பூக்கும். கரிசலாங்கண்ணிக் கீரையை வீட்டிலும் வளர்க்கலாம்.

மருத்துவக் பயன்கள்:
         கரிசலாங்கண்ணிக் கீரையில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி, சி ஆகியவை நிறைந்து உள்ளது.
         கரிசலாங்கண்ணிக் கீரையை அன்றாடம்  உனவில் சேர்த்து வந்தால் மஞ்சள் காமாலை , கல்லீரல் வீக்கம், போன்ற நோய்களை குணப்படுத்தும் அறிய ஆற்றல் இக்கீரைக்கு உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையை பச்சையாக இடித்து சாறு எடுத்து வேலைக்கு இரண்டு அவுன்சு வீதம் காலை மாலை 2 வேளைகளிலும் 7 நாட்கலுக்கு தவறாமல் உட்கொண்டால் மஞ்சள் காமாலை குணமாகும். கரிசலாங்கண்ணி தைலத்தை தலை மயிரில் தடவி வந்தால் தலை முடி கருத்து செழித்து வளரும். முடி உதிர்வதையும் , இளநரை
ஏற்படுவதையும் தடுக்கும்.

கரிசலாங்கண்ணிக் கீரை உடல் நலத்திற்க்கு உகந்த கீரை.....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகளை பதிவு செய்க: