வெள்ளி, 6 நவம்பர், 2015

அரைக் கீரை

அரைக் கீரை செடிவகையை சேர்ந்தது. இச்செடி அரையடி முதல் ஒரு அடி வரை கிளைவிட்டு வளரும். இக்கீரை அறுக்க அறுக்க வளரும் தன்மையுடையது. இக்கீரைக்கு அறு கீரை,கிள்ளுக் கீரை போன்ற வேறு பெயர்க்களும் உண்டு. இதன் இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறியதாக இருக்கும். இக்கீரை மேல் நிறம் பச்சையாகவும் அடிபாகம் மெல்லிய செந்நிறத்தோடும் தோன்றும். இக்கீரையை வீட்டிலும் வளர்க்கலாம்.

மருத்துவப் பயன்கள்:
  அரை கீரையில் பல அறிய சத்துக்கள் உள்ளன. இகீரையில் கால்சியம்.பொட்டாசியம், இரும்பு சத்து, வைட்டமின் பி,சி ஆகியவை உள்ளன.
  சளி,இருமல் குணமாக்கும். பசியை தூண்டும் சக்தி இதற்கு உண்டு. இக்கீரை கண் சம்பன்தமான நோய்களை குணப்படுத்த வல்லது. பிரசவித்த பெண்கள் பலம் பெறவும், குழந்தைகளுக்கு தேவையான தாய்ப்பால் சுரக்கவும் இக்கீரை பயன்படும். நரம்புதளர்ச்சி உள்ள வலிபர்களுக்கு இக்கீரை சிறந்த மருந்து. வாத நோய்,உடல், மூட்டு நோய் உள்ளவர்கள் இக்கீரையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நோய் குணமாகும். நோயால் தளர்வுற்ற உடலுக்கு வலுவும், சக்தியும் தரக்கூடியது. இக்கீரையை தினமும் உண்டு வந்தால் உடலுக்கு அழகும் வலுவும் கிடைக்கும்.

அரைக் கீரை ஒரு சிறப்புமிக்க கீரை.....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகளை பதிவு செய்க: